ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்; கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி

0
166

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படக்குழுவினர் நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி தலைவா… உங்களுடனான ஒரு மணி நேர உரையாடல் எங்கள் படக்குழுவினருக்கு நேர்மறையான எண்ணத்தை கொடுத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில் எடுத்த புகைப்படங்களையும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார்.

மேலும், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

அதில், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புத படைப்பு. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருப்பதாக” என்று அதில் குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.