சூதாட்டத்தில் ஈடுபட்டோரை சமூகசேவை செய்யுமாறு உத்தரவிட்ட வெலிசறை நீதிமன்றம்

0
146

அனுமதியின்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட மற்றும் மிருகவதை செய்த குற்றச்சாட்டில் வெலிசறை நீதிவான் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் உட்பட 18 பேருக்கு 7 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து வெலிசறை நீதிவான் புத்திக உடுவவிதான உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மூன்று மாதங்களுக்கு சமூக சேவை செய்யுமாறு நீதிவான் மேலும் உத்தரவிட்டார். குறித்த சம்பவத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கைப்பறற்ப்பட்ட சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான 11 சண்டைக் கோழிகளை குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள அரச கால்நடை பண்ணையில் ஒப்படைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.