பனை பொருட்கள் ஏற்றுமதி: 78 மில்லியன் ரூபா வருமானம்

0
174

இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் பனை பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 78 மில்லியன் ரூபா வருமானம் நாட்டிற்கு கிட்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் பனை வெல்லம் மற்றும் தேன் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பனை தொடர்பான உணவு கைத்தொழில் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் உற்பத்திகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை தயாரிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.