இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், குறித்த பகுதிக்கான வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இன்று பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
குறித்த பகுதியில், பெருமளவான சிவில் செயற்பாட்டாளர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட படையினர் பெருமளவானோர் குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், நீர்த்தரைப் பிரயோக வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.