கவினுடன் விருந்து சாப்பிடும் பிரதீப்! பிக்பாஸ்க்கு பிறகு முதல் சந்திப்பு

0
141

பிக் பாஸ் புகழ் பிரதீப் தனது நண்பரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான கவீனை நேரில் சந்தித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வலுவான போட்டியாளராக கருதப்பட்டு வந்த பிரதீப்பிற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது.

பிரதீப்பை ஒவ்வொருமுறையும் சக போட்டியாளர்கள் நாமினேட் செய்தாலும் அவருக்கு வாக்களித்து அவரை முதல் ஆளாக எலிமினேஷனில் இருந்து காப்பாற்றிவிடுவார்கள் ரசிகர்கள். பிரதீப்பிற்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து மற்ற போட்டியாளர்கள் கடுப்பில் இருந்தனர்.

இந்நிலையில் பிரதீப்பினால் எங்களுக்கு ஆபத்து, அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை என பெண் போட்டியாளர்கள் பிரதீப்பின் மீது குற்றம்ச் சாட்டினார்கள்.

மேலும் பிரதீப் நடந்துகொள்ளும் விதமும், அவர் பேசும் வார்த்தைகளும் சரியில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை போட்டியாளர்கள் முன்வைத்தனர்.

இதையடுத்து தினேஷ், விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகியோர் மட்டுமே பிரதீப் இந்நிகழ்ச்சியில் தொடரலாம் என்றனர். ஆனால் மற்றவர்கள் எல்லாம் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கவேண்டும் என பேசினார்கள். எனவே மேஜாரிட்டி அடிப்படையில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு அவரை வீட்டை விட்டு பிக் பாஸ் வெளியேற்றியது.

அதுமட்டும் இன்றி பிரதீப் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றிய பிறகு அவருக்கு பேசக்கூட வாய்ப்பளிக்கவில்லை என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருப்பதாக கூறி ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு ஆதரவாக களத்தில் இறங்கினார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது நீண்ட நாள் நண்பர் கவீனை பிரதீப் சந்தித்துள்ளார். இருவரும் இணைந்து விருந்து உண்டு மகிழ்ந்துள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.