“கூட நின்றதற்கு நன்றி ” என்று பிக் பாஸ் பிரதீப் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. பிரதீப் ஆண்டனி வெளியேற்றத்தை மக்களாலும், பிக் பாஸின் முன் சீசன் போட்டியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பிரதீபின் வாதத்தை கேட்காமல் அவரை அனுப்பியது சரியில்லை.
ஆபாச வார்த்தைகளுக்காக ரெட் கார்ட் கொடுத்திருந்தால் சரி, ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனும் மிகப்பெரிய குற்றச்சாட்டுடன் அவரை அனுப்பியதை ஏற்க முடியவில்லை என தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிரதிப்புக்கு ஆதரவான பதிவுகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரதீப் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.
How I feel seeing the social media response for my game 🤣
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 5, 2023
Kooda ninnathuku nandri 🙏 Ennala mudinja alavuku nalla artist ah aga try pandren 🙏#NallaIrunga #AduthaVelaiyaPapoam pic.twitter.com/AE0IHc4ocz
அதில் “சமூக வலைத்தளங்களில் அவருக்கு கிடைத்திருக்கும் ஆதரவையும் அவர் விளையாட்டுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பையும் பார்த்ததாகவும் அதற்கு தகுந்தார் போல வடிவேலுவின் நகைச்சுவையான டயலாக்கையும் வீடியோவாக பிரதீப் பதிவிட்டு இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் கூட நின்றதற்கு நன்றி எனவும் என்னால் முடிந்த அளவிற்கு நல்ல ஆர்டிஸ்டாக முயற்சிக்கிறேன்” எனவும் அந்த பதிவில் அவர் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவிற்கான ஹேஷ்டேகாக நல்லாயிருங்க மற்றும் அடுத்த வேலையை பார்ப்போம் என அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அவருக்கு கிடைத்த ஸ்டார், ரெட் கார்ட் என பல பொருட்களை வைத்து பிக்பாஸில் அவருக்கு கிடைத்த ட்ராபிஸ் என பதிவிட்டிருந்தார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.