மாநகர சபைக்கு சொந்தமான 51 லட்ச ரூபாவை திருமணத்திற்கு பயன்படுத்திய பெண்!

0
169

கண்டி மாநர சபைக்கு சொந்தமான 51 இலட்ச ரூபா பணத்தை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்திய பெண் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நிதி திணைக்களத்தின் ஒரு பிரிவின் பிரதான முகாமைத்துவ சேவையில் கடமையாற்றும் பெண் அதிகாரியே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தன்னுடைய உறவினர் ஒருவருக்கு வெகு விமர்சையாக திருமணத்தை நடத்தி வைப்பதற்காகவே குறித்த பெண் மாநகர சபைக்கு சொந்தமான பணத்தை இவ்வாறு பயன்படுத்தியுள்ளார்.

கண்டி மாநாக சபையின் நாளாந்த வருமான 51 இலட்சம் ரூபாயை நகர சபையின் கணக்கில் வைப்பிலிடாது திருமண வைபவத்திற்கு பயன்படுத்தியமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் கண்டி மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக்க ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில்,

கண்டி மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களை கருத்திற்கொண்டு மாநகர சபையின் கணக்குப் பிரிவில் செலுத்தப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் ஆராய்ந்துள்ளார்.

இதனடிப்படையில் தபால் திணைக்களத்தின் ஊடாக மாநகரசபை கணக்கில் வரவு வைப்பதற்காக மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக்க தெரிவித்தார்.

இதன்படி நகர மக்கள் மாநகர சபைக்கு செலுத்தும் வரி, குடிநீர் கட்டணம் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் தபால் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும, தினசரி அடிப்படையில் நகராட்சி கணக்குகள் துறையினால் பெறப்படும் பணத்தை குறைக்கும் வகையில் பணி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பணியாளரை பணி இடைநிறுத்தம் செய்வதற்கான பரிந்துரையை மாகாண பிரதம அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் குறித்த பரிந்துரை மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமவன்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.