முறைகேடாக சட்டக்கல்லூரி பரீட்சை எழுதிய பாராளுமன்ற உறுப்பினர் – பிரபல அரசியல்வாதிக்கும் தொடர்பு

0
167

அகில இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை அண்மையில் இடம்பெற்றது. இதன்போது தென் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விடைத்தாள்களை மறைத்து வைத்து விடைகளை எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு கடுமையான நிபந்தனைகளின் கீழ் தேர்வுத் துறையால் நடத்தப்படுகிறது.

அதன்படி, சட்டங்கள் தொடர்பிலான பாடப் புத்தகங்களை அருகில் அடுக்கி வைத்து பரீட்சைக்கான பதில்களை எழுதியதாக தகவல் வெளியானதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த பாராளுமன்ற உறுப்பினர் உயர்மட்ட அரசியல்வாதிகளின் உதவியின் மூலம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தவிர்க்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு தொடர்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.