மகிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் தோசம் நீங்க விசேட பூஜை..

0
141

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபக்சவின் நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக கண் திருஸ்ட்டி, தோசங்கள் ஏற்பட்டுள்ளதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

 ஏற்பட்டுள்ள தோசங்களை கழிக்கும் பூஜைகள், பிரித் பரிகாரங்கள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

 அதற்கமைய, அடுத்த மாதம் 3ஆம் திகதி இரவு பூஜை வழிப்பாடுகளை மேற்கொண்டு மறுநாள் காலை தானத்துடன் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. 

பிரித் பரிகாரங்கள்

 கட்சியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு இது நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டாலும், கட்சி அலுவலகத்தில் தற்போது எழுந்துள்ள தேவையற்ற தோசங்களை இல்லாமல் செய்வதே இதற்கான உண்மையான காரணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.