தென்னிந்திய நாயகிகளிலேயே அதிகம் படித்தவர்கள் இவர்கள் தான்..

0
216

சினிமா துறை என்று வரும் பொழுது நடிகைகளின் படிப்பு குறித்து யாரும் பெரிதாக பேசுவதோ சிந்திப்பதோ கிடையாது. ஆனால் நாம் கொஞ்சமும் யோசிக்காத அளவுக்கு சினிமா நடிகைகளில் பலரும் கல்வியில் சிறந்தவர்களாக இருக்கின்றனர்.

தென்னிந்திய சினிமா நடிகைகளுள் பட்டப்படிப்பை படித்துவிட்டு நடிக்க வந்தவர்களும் இருக்கின்றார்கள் என்பது சற்று பிரம்மிப்பாகத்தான் இருக்கின்றது.

அப்படி எந்த நடிகை எதுவரை படித்திருக்கின்றார் என்ற முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிகம் படித்த நடிகைகள் 

தென்னிந்தியாவில் அதிகம் பேசப்படும்  சமந்தா தமிழில் மாஸ்கோவின் காவிரி படம் மூலம் அறிமுகமானார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான இவர்  சென்னையில் உள்ள பல்லாவரத்தில் வளர்ந்த பெண் இவர். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இவர் இளங்களை பட்டப்படிப்பு படித்துள்ளார்.

தென்னிந்திய நாயகிகளிலேயே அதிகம் படித்தவர் இவர்தானாம் ! யார்னு தெரியுமா?

அட்டகத்தி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர், ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த  ‘காக்கா முட்டை’ திரைப்படம் தேசிய விருதை பெற்றது. இவர், எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்துள்ளார்.

தென்னிந்திய நாயகிகளிலேயே அதிகம் படித்தவர் இவர்தானாம் ! யார்னு தெரியுமா?

 தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நாயகி, நித்யா மேனன். இவர், தமிழில் ‘நூற்றென்பது’ எனும் படம் மூலம் அறிமுகமானார். விஜய், சூர்யா, துல்கர் சல்மான், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் ஜர்னலிஸம் கற்றுள்ளார். 

தென்னிந்திய நாயகிகளிலேயே அதிகம் படித்தவர் இவர்தானாம் ! யார்னு தெரியுமா?

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், ராஷ்மிகா மந்தனா. கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து பல  படங்களில் நடித்து  ஹிட் கொடுத்துள்ளார். வெகு விரைவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்ட இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் சைக்காலஜி, ஜர்னலிசம் மற்று இங்க்லீஷ் லிட்டரெச்சர் பட்டப்படிப்பு வரை கற்றுள்ளார். 

தென்னிந்திய நாயகிகளிலேயே அதிகம் படித்தவர் இவர்தானாம் ! யார்னு தெரியுமா?

திரையுலகில்  ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில்  ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார். நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம், வசூலில் 1000 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.  கேரளாவில் படித்து வளர்ந்த இவர், ஆங்கில லிட்டரெச்சர் (English Literature) கற்றுள்ளார். 

தென்னிந்திய நாயகிகளிலேயே அதிகம் படித்தவர் இவர்தானாம் ! யார்னு தெரியுமா?

தென்னிந்தியாவின் தேவதையாக பார்க்கப்டும் நாயகி, த்ரிஷா. கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஆட்சி செய்து வரும் நாயகிகளுள் இவரும் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது ‘தி ரோட்’ திரைப்படம் வெளியானது. வரும் 19ஆம் தேதி லியோ படம் வெளியாகிறது.இதில் இவர் நாயகியாக நடித்துள்ளார். த்ரிஷா, மாடலிங் துறை மூலம் திரையுலகில் கால்பதித்ததார். இவர், சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ (Bachelor of Business Administration) பட்டப்படிப்பு வரை கற்றுள்ளார். 

தென்னிந்திய நாயகிகளிலேயே அதிகம் படித்தவர் இவர்தானாம் ! யார்னு தெரியுமா?

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமான நாயகி, சாய் பல்லவி. முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். 

தென்னிந்திய நாயகிகளிலேயே அதிகம் படித்தவர் இவர்தானாம் ! யார்னு தெரியுமா?

பாலிவுட்டில் உருவாகும் ராமாயண கதையில் சீதையாக நடித்து இந்தி திரையுலகிற்குள் இவர் எண்ட்ரி காெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. இவர், ஜார்ஜியாவில் உள்ள ஒரு பிரபல மருத்துவ பல்கலை கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பு படித்துள்ளார். தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நாயகிகளிலேயே அதிகம் படித்தவர் இவர்தான் என அறியப்படுகின்றது.