சமாதானத்திற்கான நோபல் பரிசு பெறும் ஈரானிய பெண் சமூக ஆர்வலர்

0
201

உலகின் மிகவும் மதிப்புமிக்க சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 2023ஆம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசு ஈரானை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் நர்கீஸ் மொஹமதிக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக நர்கீஸ் மொஹமதி போராடி வருவதுடன் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காக போராடியமைக்காக அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.