கொத்து ரொட்டி போடுவதை போல் பொருளாதாரத்தை உருவாக்க முடியாது – நிமல் சிறிபால டி சில்வா

0
160

கொத்து ரொட்டியை போடும் விதத்தில் அவசரமாக பொருளாதாரத்தை மேம்படுத்தி புத்திசாலிகளின் வெளியேற்றத்தை தடுத்து விட முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

படித்த தொழில்சார் நிபுணர்கள் நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது உலகளாவிய போக்காக மாறியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியாவில் கூட இது நடக்கின்றது. படித்த புத்திசாலிகள் இலங்கையில் இருந்து மட்டுமே வெளியேறுகின்றனர் என்று காண்பிக்க எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இப்படியான விடயங்களை சமூகமயப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.