பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை; நையப்புடைத்த மனைவி

0
196

தனது 04 மாத மகளுக்கு கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் சிசுவின் தந்தை மொனராகலை பொலிஸாரால் கடந்த (05) கைது செய்யப்பட்டார்.

மொனராகலை – சிறிகல மொனரகெலேவத்தை (உடகோட்டாச) பகுதியைச் சேர்ந்த 31 வயதான தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அன்று காலை குழந்தையின் தாய், குழந்தையை கணவனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

குழந்தையின் அழுகை கேட்டு  திரும்பி வந்த தாயார்

பச்சிளம் சிசுவுக்கு தந்தையால் நேர்ந்த கொடுமை; நையப்புடைத்த மனைவி | The Cruelty Of The Father To The Infant

சிறிது தூரம் சென்றதும் குழந்தை ஓயாமல் அழும் சத்தம் கேட்டு வீடு திரும்பிய அவர், தந்தை தரையில் அமர்ந்து குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்வதை பார்த்தார்.

அதிர்ந்துபோன மனைவி கணவரை தாக்கியதுடன் குழந்தையை தூக்கிச் சென்று மொனராகலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிசு மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.