சர்வதேச விசாரணை வேண்டாம்; ஆட்சியை கைப்பற்றும் எண்ணமும் இல்லை – மஹிந்த

0
201

சர்வதேச விசாரணை வேண்டாம் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துடன் தானும் உடன்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) மத வழிபாட்டை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை கூறினார்.

அத்துடன் தமக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எண்ணம் இல்லை என்றும் புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.