அரச வங்கியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: பெருந்தொகை தங்கம் மாயம்!

0
203

வென்னப்புவ, வைக்கல அங்கம்பிட்டியவில் உள்ள அரச வங்கி ஒன்றில் தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அங்கு சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 28 ஆம் திகதி வங்கியின் கையிருப்பில் இருந்து தங்கம் திருடப்பட்டது. இரவு வேளையில் வங்கிக்குள் பிரவேசித்த சிலர் அங்கிருந்த பெட்டகத்தை உடைத்து தங்கத்தை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.