எஜமானை காப்பாற்ற நாகப்பாம்புடன் சண்டையிட்டு உயிரிழந்த நாய்: கண்ணீர் விட்ட மற்றொரு நாய்!

0
174

தமிழகத்தில் எஜமானை காப்பாற்ற விஷ பாம்புடன் போராடி நாய் உயிரை விட்டதை பார்த்த மற்றொரு நாய் கண்ணீர் சிந்தியது காண்போர் மனதை உலுக்கியது. சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த தம்பதி மதிவாணன் – நந்தினி. இவர்கள் மேக், டம் என இரு நாய்களை வளர்த்து வந்தனர்.

இன்று மதிவாணன் வேலைக்கு சென்ற போது நந்தினி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது நாய்கள் வழக்கத்துக்கு மாறாக அதிக சத்தத்துடன் குறைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடியுள்ளது.

இதையடுத்து நந்தினி வீட்டின் பின்புறத்துக்கு வந்த போது அவரை அந்த இடத்திற்கு செல்ல விடாமல் நாய்கள் தடுத்துள்ளன. அப்போது அங்கு 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு இருப்பதை பார்த்த நந்தினி வனத்துறைக்கு போன் செய்தார்.

இதனிடையில் பாம்புடன் இரு நாய்களும் சண்டையிட்டன. வனத்துறை ஊழியர்கள் வந்த போதும் சண்டையிட்ட நாய்கள் பாம்பை கடித்து குதறின.

அப்போது பாம்பு கொத்தியதில் மேக் என்ற நாய்க்கு விஷம் ஏறி வாயில் நுரைதள்ளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. இதனை பார்த்த மற்றொரு நாய் டாம் கண்ணீர் சிந்தியபடி அருகிலேயே சோகத்தில் அமர்ந்து கொண்டது.

தன் உயிரை பணயம் வைத்து எஜமானை காப்பாற்றிய அந்த நாயின் நன்றியுணர்வு பலரையும் நெகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.