ஒரே மாதத்தில் அடர்த்தியாக முடி வளர ஆயுர்வேத எண்ணெய்..

0
221

முடி உதிர்தல் பிரச்சினை குணமாக மற்றும் புதிய முடி வளர வீட்டில் செய்யக்கூடிய இந்த எண்ணெயை பயன்படுத்தவும்.

இது புதிய முடி வளரவும், 30 நாட்களில் முடி உதிர்வதை நிறுத்தவும் உதவும்.

மேலும், இந்த எண்ணெய், உங்கள் தலைமுடியை 30 நாட்களில் நீங்களே நினைத்திராத அளவுக்கு வளரச் செய்யும்.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய்-1 கப்
  • வெங்காயம்(நறுக்கியது)- 1 கப்
  • சுரைக்காய்(தட்டியது)- 1கப்
  • வெந்தயம்- டீஸ்பூன் 2
  • வைட்டமின் ஈ காப்ஸ்யூல்- 1
  • கருஞ்சீரகம்
  • கறிவேப்பிலை
  • விளக்கெண்ணெய்

செய்முறை

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

இப்போது நறுக்கிய வெங்காயம், வெந்தயம், கருஞ்சீரகம் , விளக்கெண்ணெய், நசுக்கிய சுரைக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

அனைத்தையும் கலந்து கொதிக்க விடவும். எண்ணெய் நல்ல நிறம் மாறியதும் தீயை அணைக்கவும்.

hair growth oil/முடி வளர்ச்சி எண்ணெய்

இப்போது எண்ணெய் ஆறியவுடன் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.

இந்த எண்ணெய்யில் வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சேர்க்கவும்.

எப்படி பயன்படுத்துவது?

வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை தேய்க்கவும். ஷாம்பு போட்டு குளிப்பதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன் இதைப் பயன்படுத்துங்கள்.

5-10 நிமிடங்கள் மசாஜ் செய்த பின் மென்மையான ஷாம்பூவைக் கொண்டு கழுவவேண்டும்.