விஜய் ஆண்டனி பட பாணியில் மனைவியை கொன்ற கணவர்!

0
223

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் பட பாணியில் காதல் மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்ட நிலையில் அது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கோகிலவாணி.

இவரும் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள சென்னகேசவன் நகரை சேர்ந்த முரளிகிருஷ்ணன் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தன நிலையில் 18 மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் அலைபாயுதே திரைப்பட பாணியில் அவரவர் வீட்டில் தனித்தனியே வசித்து வந்தனர். இதையடுத்து முரளிகிருஷ்ணன் சேலத்தில் உள்ள மனைவியை பார்க்க அடிக்கடி சென்றார். நாளடைவில் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் சரிவரப் பேசாமல் இருந்து வந்தனர்.

மேலும் கணவன் பெங்களூரில் இருந்து சேலம் வருவதை மனைவி தடுத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கணவன் மனைவியை கண்காணித்த போது பல ஆண்களுடன் அவர் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டிருந்த நிலையில் தம்பதி நேற்று முன் தினம் சந்தித்து பேசினர்.

Muralikrishnan

அப்போது திடீரென முரளிகிருஷ்ணன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மனைவியை குத்தி கொலை செய்துள்ளார். மேலும் காவல்துறை அடையாளம் கண்டு பிடிக்காமல் இருக்க பெட்ரோல் ஊற்றி மனைவியின் முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை எரித்துள்ளார்.

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் பட பாணியில் இவர் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி அந்த பெண்ணின் சடலத்தை எரித்து சிதைத்துள்ளார்.

அதன்பின் பெண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அதில் செல்போனில் கோகிலவாணி முரளிகிருஷ்ணனுடன் பேசியதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

விசாரணையில் முரளி கிருஷ்ணன் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முரளிகிருஷ்ணனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.