யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க விரும்பும் சந்தோஷ்

0
170

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு என தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த சந்தோஷ் நாராயணன், மாலை தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் இசை நிகழ்வை நடாத்த உள்ளேன். துவண்டு போய் உள்ள மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் இந்த இசை நிகழ்வு இருக்கும் என நம்புகிறேன். இந்த இசை நிகழ்வு முற்றிலும் இலவசமானது.

அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினையும் நிகழ்வாக இருக்கும்.  அடுத்து வரும் நாட்களின் நிகழ்வுகள் தொடர்பில் அறிவிப்புக்கள் தொடர்ந்து வரும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள இசைத்துறை சார்ந்தவர்களையும் எனது குழுவையும் ஒன்றிணைத்து யாழ்ப்பாணத்தில் நடாத்தும் இந்த இசை நிகழ்வும் இலங்கை தாண்டி வெளிநாடுகளில் உள்ளவர்களின் கவனத்தையும் ஈர்க்கும் என்ற நம்பிக்கை உண்டு என்றார். 

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. எனவும் தெரிவித்தார்.