புதைக்கப்பட்ட 2வயது சிறுமியின் உடல் மாயம்; ஒப்படைப்பவர்களுக்கு 20 லட்சம் சன்மானம்

0
188

வவுனியாவில் புதைக்கப்பட்ட  2 வயதான சிறுமியின் சடலம் காணாமல்போயுள்ள நிலையில்,  சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் சன்மானம்  வழங்கப்படும் என சிறுமியின் அம்மம்மா  தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் நேற்றையதினம்  (19.09) ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இதன்போது  அவர் மேலும் தெரிவிக்கையில்,

2 வயது சிறுமியின் உடல் மாயம்

கடந்த 25.08.2023 ஆம் திகதியன்று வவுனியா, பாரதிபுரம் பகுதியில் 2 வயது சிறுமி ஒருவர் நீர்த் தொட்டியில் தவறி விழுந்து  பரிதாபமாக  உயிரிழந்தார்.  இதனையடுத்து    சிறுமியின் உடல் இராசேந்திரங்குளம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

எனினும் கடந்த 05.09.2023 அன்று சிறுமியின் உடல் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைக்குமாறும் கண்னீருடன் கோரியுள்ளார்.  

அத்துடன்  சிறுமியின் சடலத்தை எடுத்தவர்கள் மீள கையளிக்கின்ற போது 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கூறிய சிறுமியின் அம்மம்மா அதுதொடர்பில் தகவல்களை வழங்குவோரிற்கு  10 லட்சம் சன்மானம் தருவதாகவும் அவர்  கண்ணீருடன் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த சிறுமின் சடலத்தை காணவில்லை என நெளுக்குளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் , இதுவரை சிறுமியின் சடலம்  மாயமானது குறித்து எந்த தகவலௌம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.