ஆண்கள் ஆசியக் கிண்ணத்தில் முதல் முறையாக பெண் நடுவர்கள்!

0
261

AFC ஆடவர் ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட தொடரிற்கு ஜப்பான் வீராங்கனை Yoshimi Yamashita உள்ளிட்ட பெண்கள் நடுவராக இருப்பார்கள் என்று அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டுகான AFC ஆடவர் ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 12ம் திகதி முதல் பெப்ரவரி 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது

குறித்த போட்டிக்கு 74 போட்டி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் முதன்முறையாக AFC ஆடவர் ஆசியக் கிண்ண கால்பந்தாட்ட தொடரிற்கு பெண்கள் நடுவர்கள் அறிமுகமாக உள்ளனர்.

இந்த நடுவர் குழாமில் ஜப்பான் வீராங்கனை Yoshimi Yamashita உட்பட மேலும் ஐந்து பெண் நடுவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.