யாழ் நீர்வேலியில் வீட்டிற்குள் புகுந்து யுவதியை வெட்டிய குழு!

0
176

யாழ்ப்பாணம் நீர்வேலி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு வெட்டும் ஆயுதங்களுடன் புகுந்த குழு வீட்டில் இருந்த யுவதி யுவதியின் தாய் மற்றும் சகோதரரை வெட்டி காயப்படுத்தியுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு பேர் கொண்ட குழுவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 24 வயதான யுவதி யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடக நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வருபவர் எனவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.