செந்தில் தொண்டமானின் அழைப்பை ஏற்று இலங்கை வருகிறார் கேரள முதல்வர்

0
157

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிரணாய் விஜயனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில், கேரளாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில்  சுற்றுலா அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் 1970 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள மலையக மக்கள் 1480 குடும்பங்கள் கேரளாவில் மீள்குடியேற்றப்பட்டன.

இவர்கள் R.P.L( Rehabilitation Plantation limited) நிறுவனத்திலும், கேரளா வன அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திலும் தொழில் புரிகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிர்சசினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் பணிகளுக்கு கேரள முதல்வர் பிரணாய் விஜயன் வாழ்த்துக் கூறியதுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் இலங்கைக்கு வருகை தருமாறு விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை வருவதாகவும் உறுதியளித்தார்.