கண்ணாடியை எவ்விடத்தில் மாட்டுவதால் எவ்வாறான பலன் கிடைக்கும்..

0
241

வீட்டிலுள்ள பொருட்களை வாஸ்து பிரகாரம் வைப்பதால் நன்மைகள் அதிகளவு பெருகும். முகம் பார்க்கும் கண்ணாடி என்பது அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகி விட்டது.

பொதுவாக கண்ணாடி என்பது முக அழகை, ஆடை அழகுகளை பார்த்து ரசிப்பதற்கும், சரி செய்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பண்டைய சாஸ்திர முறைகளின் படி கண்ணாடி என்பது, மகாலட்சுமியின் அம்சமாக குறிப்பிடப்படுகிறது. அதனால் தான் வரலட்சுமி விரதம், சுமங்கலி பூஜை ஆகியவற்றின் போது வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கும், சீர்வரிசையிலும் கண்ணாடி முக்கியமான பொருளாக இடம்பெறுகிறது. கண்ணாடி என்பது நம்முடைய வீட்டில் நேர்மறையான சக்தியை ஈர்த்து வைக்கும் தன்மை கொண்டதாகும்.

ஆனால் தற்போது அழகு, ஆடம்பரத்திற்காக வீட்டில் பல இடங்களிலும் முகம் பார்க்கும் கண்ணாடியை பொருத்தும் வழக்கம் வந்து விட்டது. சிலரது வீடுகளில் படுக்கும் கட்டில்களில் கண்ணாடி பொருத்தி இருப்பார்கள். இப்படி இருந்தால் அந்த கட்டிலில் படுத்து தூங்குபவர்களுக்கு பல விதமான மனக்குழப்பங்கள் ஏற்படும். அதோடு அவர்களுக்கு பல விதமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

கண்ணாடி வைக்க கூடாத இடங்கள் :

கண்ணாடியை எவ்விடத்தில் மாட்டுவதால் எவ்வாறான பலன் கிடைக்கப்பெறும் | Obtained By Putting The Mirror In Any Place

இத்தகைய கண்ணாடி பொருந்தப்பட்ட மரக்கட்டில்களில் படுத்து உறங்கும் தம்பதிகளுக்குள் அடிக்கடி மனக்கசப்புகள், சண்டை, சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சாப்பிடும் அறையில் உங்களின் முகம் கண்ணாடியில் பிரதிபலிக்கும் வகையில் கண்ணாடியை வைக்கக் கூடாது. தெற்கு மற்றும் மேற்கு திசை பார்த்தவாறு முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டுவது சிறப்பானதாகும்.

குளியல் அறையில் கண்ணாடி மாட்டுவதாக இருந்தால், கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு மாட்ட வேண்டும். பலரது வீடுகளில் எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் வராமல் இருப்பதற்காக வீட்டு வாசல் படிக்கு முன் கண்ணாடியை மாட்டி வைத்திருப்பார்கள்.

ஆனால் மகாலட்சுமியின் அம்சமான கண்ணாடியை வீட்டிற்கு வெளிபுறம் பார்த்தவாறு மாட்டுவதால் வீட்டில் பொருள் முடக்கம் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. ஒருவேளை கண்ணாடியை வீட்டிற்கு முன் மாட்ட வேண்டும் என்பவர்கள் அதை தினமும் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டாலோ அல்லது உடைந்தாலோ அதை உடனடியாக மாற்றி விட வேண்டும்.

கண்ணாடியை எவ்விடத்தில் மாட்டுவதால் எவ்வாறான பலன் கிடைக்கப்பெறும் | Obtained By Putting The Mirror In Any Place

முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமின்றி வீட்டில் வேறு ஏதாவது கண்ணாடியால் ஆன பொருள் உடைந்தாலோ அதை வீட்டிலோ, வீட்டை சுற்றியோ வைக்கக் கூடாது. உடைந்த கண்ணாடி பொருட்களில் இருந்து எதிர்மறை ஆற்றல்கள் அதிக அளவில் வெளியேறும். அதனால் உடைந்த கண்ணாடி பொருட்களை வீட்டில் வைக்காமல் அதை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும் என்பார்கள்.

அப்படி உடைந்த கண்ணாடி பொருட்களை வீட்டிலோ, வீட்டிற்கு அருகிலோ வைத்தால் அதனால் வீட்டில் பண நஷ்டம், இழப்புகள் அதிகம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.