தேங்காய்களை உடைத்து வழிபடும் காணொளி; வைரலாகும் வீடியோ!

0
402

தேங்காய்களை உடைத்து வழிபடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிற நிலையில் அந்த காணொளியின் உண்மைதன்மை தொடர்பில் factseeker ஆராய்ந்துள்ளது.

இந்த காணொளி இலங்கை தமிழர்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடு என்றும் மற்றொரு தரப்பினர் இந்தியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்று எனவும் இந்த காணொளியை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், இந்த நிகழ்வு பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் இடம்பெறும் பிள்ளையாருக்கான பண்டிகை என்பதையும் இது பல்வேறு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து ஒன்றிணைக்கும் விதமாக நடத்தப்படுகிறது என்பதை factseeker கண்டறிந்துள்ளது.

இவ்வாறு பகிரப்படும் காணொளியானது கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் நடைபெற்றுள்ளது.

பல்வேறு நாடுகளின் பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதையும் factseeker சுட்டிக்காட்டியுள்ளது.