சந்நிதி முருகனை தரிசிக்க சென்று 25 பவுண் நகைகளை பறிகொடுத்த பக்தர்கள்!

0
182

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச்சன்னதியான் ஆலய தேர் திருவிழா புதன்கிழமை (30) நடைபெற்றது.

சந்நிதி முருகனை தரிசிக்க சென்று 25 பவுண் நகைகளை பறிகொடுத்த பக்தர்கள்! | 25 Pounds Of Jewelry Stolen In Sannidhi Temple

பொலிஸாருக்கு 11 முறைப்பாடுகள்

அதன் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவாள் பக்தர்கள் ஆலய தேர் திருவிழாவிற்கு வருகை தந்திருந்தனர்.  

இந்நிலையில் பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தோரின் நகைகளை திருடி உள்ளனர்.

இந்த திருட்டுக்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அந்த  முறைப்பாட்டின் பிரகாரம் சுமார் 25 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.