முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்துள்ளன.
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ். ஆரியகுளம் நாகவிகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும் – சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பெளத்த இந்து அமைப்புகள் இதனை அறிவித்தன. நாளைய தினம் (18)குருந்தூர் மலையில் சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ளனர்.
இந்நிலையில் அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறவில்லை ஊடகவியாலளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.
இதன்போது ஆரியகுளம் நாக விகாராதிபதி, குருந்தூர் மலை விகாராதிபதி, தையிட்டி விகாராதிபதி, நாவற்குழி விகாராதிபதி உள்ளிட்ட சைவ இந்து அமைப்புகள் பலரும் கலந்து கொண்டனர்.