குழந்தையை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த அமெரிக்க பெண் மருத்துவர்!

0
158

அமெரிக்காவில் பிரபலமான பெண் மருத்துவர் ஒருவர் தனது குழந்தையை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள பிரபல மவுண்ட் ஸினாய் மருத்துவமனையில் பணி புரிந்தவர் Dr கிரிஸ்டல் காஸெட்டா. புற்றுநோயியல் நிபுணரான இவர் நேற்று முன் தினம் காலை 7 மணியளவில் தனது குழந்தையின் அறைக்கு சென்றார். பின்னர் குழந்தையை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தின் போது கிரிஸ்டலின் கணவர் டிமோதி வீட்டில் இல்லை எனவும், அவரின் பெற்றோர் வீட்டில் இருந்தனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிரிஸ்டலின் இந்த முடிவுக்கு காரணம் இன்னும் தெரியாத நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையில் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.