சாணக்கியனின் வீடியோவால் பிள்ளையான் கூட்டத்தில் பெரும் குழப்பம்; ஊடகவியலாளர் மீது எகிறி பாய்ந்த பிள்ளையான்!

0
287

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி, பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை – சந்திர காந்தனால் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படும் நிலையில் இன்றும் பிள்ளையான் குறித்த  ஊடகவியலாரை அச்சுறுத்தியுள்ளார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தில் அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்றது.

இவன வெளியில் அனுப்புங்கடா 

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஒழுங்கான முறையில் இடம் இட ஒதுக்கீடு ஒதுக்கமை தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டபோது இடையில் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) இவன வெளியில் அனுப்புங்கடா இவனை உள்ளே விட்டது யார் என்று அச்சுறுத்தியதுடன் சைகை பாசையிலும்  பிள்ளையான் ஏதோ சொல்ல முற்பட்டுள்ளார். 

கூட்டத்தில் ஊடகவியலாளரை பார்த்து எகிறிய பிள்ளையான்! (Video) | Batti Journalist Constantly Threatened Pillaiyan

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பது தொடர்பாக பல தடவை இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் கவனம் எடுக்காத காரணத்தினால் இன்றும் ஊடகவியலாளர்கள் சரியான இடம் இன்மையால் இடையூறாக இருக்கின்றார்கள் என்று ஆளுநர் கூறியிருந்தார்.

இதற்கான காரணம் என்ன என்று அவரை தெளிவுபடுத்த முற்பட்டபோதே இராஜங்க அமைச்சர் சந்திரகாந்தன் ஊடகவியலாளரை அச்சுறுத்தியுள்ளார்.

சந்திரகாந்தன் பிள்ளையான் இவ்வாறு ஊடகவியலாளர்களை அடக்கி ஆழ நினைப்பது என்பது ஊடக சுதந்திரத்திற்கு ஒரு சவாலாகவே மட்டக்களப்பில் மாறியுள்ளது.

கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்களை இழந்த நாம் இன்றும் அதே தொணியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.