ஜனாதிபதியிடம் குறுக்குவழியில் தாங்கள் விரும்பும் தீர்வை தட்டிப்பறிக்கலாம் என சம்பந்தன் தலைமையிலான குழுவினர் முயல்வதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், இந்தியாவை வைத்து இலங்கையை மிரட்டலாம் எனச் சம்பந்தன் குழுவினர் எண்ணுவதாகவும் அமைச்சர் பந்துல தெரிவித்தார்.
பிரச்சினைக்கான தீர்வு – நாடாளுமன்றமே முடிவு செய்யும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை இறைமையுள்ள நாடு. எமக்கென்று ஒரு ஜனாதிபதி உள்ளார். அரசு உண்டு. பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.