காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹனவின் மனு மீதான நீதிமன்ற உத்தரவு..

0
206

எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி தம்மை இடமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை சமர்பித்துள்ளார்.

இந்த மனு இன்று (17) பிரிதி பத்மன் சூரசேன மற்றும் மகிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பரிசீலனை

மேற்படி விசாரணைகளின் படி,  இம்மனு தொடர்பில் பரிசீலிப்பதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி கூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.