குழந்தைகளின் உணவில் விஷம் கலந்த சீன ஆசிரியருக்கு மரண தண்டனை

0
196

சீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் சாப்பிடும் உணவில் சோடியம் நைட்ரைட் விஷத்தை கலந்து ஒரு குழந்தையைக் கொன்று 24 பேரை பாதிப்பிற்குள்ளாக்கிய ஒரு முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மத்தியா சீனா பகுதியில் கடந்த வாரம் அவரை தூக்கிலிட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 39 வயதான வாங் யுன் என்ற அந்த ஆசிரியர் அவருக்கு எதிரான தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

செப்டம்பர் 2020 இல் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோசு நகர இடைநிலை மக்கள் நீதிமன்றத்தால் இத்தண்டனை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அதே நீதிமன்றம் அந்த ஆசிரியரின் அடையாளத்தை சரிபார்த்து அவரை தூக்கிலிடும் இடத்திற்கு அழைத்துச் சென்று மரண தண்டனையை நிறைவேற்றியது என்று நீதிமன்ற அறிக்கை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.