யாழ். சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாது இன்று செவ்வாய்க்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (11) வழக்கு விசாரணைகள் பிறிதொரு நாள் தவணையிடப்பட்டன.
இதனால் நீதிமன்றத்திற்கு வருகை தந்த மக்கள் திரும்பிச்செல்வதை அவதானிக்க முடிந்தது.
தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.