பொதுஜன பெரமுன கட்சியினரின் சூளுரை!

0
175

நாட்டின் எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் என அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (08-07-2023) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை தொகுதிக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு எதிராக போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன எனவும் சாகர சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தேர்தல் மூலம் அல்லாமல் பலவந்தமாக ஆட்சியை பிடிப்பதற்கு சிலர் முற்படுகின்றனர் என சுட்டிக்காட்டினார்.

மக்கள் போராட்டத்தின்போது நாடாளுமன்றத்தை எரிக்க வந்தவர்களுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்தும் நாமல் ராஜபக்ச தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.