ஜனாதிபதியின் அழைப்பை திட்டவட்டமாக நிராகரித்த ஐக்கிய மக்கள் சக்தி!

0
174

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe நேற்று விடுத்த அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி இன்று நிராகரித்துள்ளது.

இதன்படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படுமானால், அதன்பின்னர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படலாம் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் இணைந்து செயற்பட தயாரில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணிலின் அழைப்பை திட்டவட்டமாக நிராகரித்த சஜித் கட்சி! | Sajith S Party Rejected President Ranil Invitation

ஊழல்வாதிகள் உள்ள தற்போதைய அரசாங்கத்தை பாதுகாப்பதற்குத் தமது அணி தயாரில்லை எனவும் அவர் கூறினார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.