உழைப்பை சுரண்டும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜீவன்

0
178

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் செயற்பாட்டில் ஈடுபடும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட தோட்டங்களில் நீண்டகாலமாக நிலவும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டமொன்று அண்மையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கொழும்பில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் (02.07.2023) ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின்போது ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு

இதன்போது அமைச்சர் ஜீவன் கூறியதாவது, கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் தொழில் பிணக்குகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை மாத்திரம் சுரண்டிக்கொண்டிருக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

தோட்ட நிறுவனம் 

மேலும், தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனத் தோட்ட நிறுவன தரப்பில் அமைச்சருக்கு உறுதியளிக்கப்பட்டதாகவும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், இ.தொ.காவின் சார்பில் அதன் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உபதலைவர் பாரத் அருள்சாமி, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து, தொழிற்சங்க தேசிய அமைப்பாளர் லோகதாஸ், கட்சி போஷகர் சிவராஜா, தோட்ட கமிட்டி தலைவர்களும், ஹட்டன் பெருந்தோட்ட யாக்கத்தின் சார்பில் அதன் நிறைவேற்று முகாமையாளர் வருண மற்றும் தோட்ட முகாமையாளர் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery