வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் – ஜனாதிபதி ரணில் அறிக்கை

0
151

நாட்டில் எதிர்பார்த்த நிலைமையை முன்னெடுத்து சென்றால் இன்னும் சில மாதங்களில் வட்டி வீதம் குறையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளன அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கடனை மறுசீரமைப்பது உங்களுக்கும் பணியாளர்களுக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்கு விளக்குவது சிறந்த விடயம் என்று நான் நினைக்கிறேன். அது உங்களால் செய்யக்கூடிய ஒன்று என்று நான் நினைக்கிறேன்.

இந்த நிலைமையை இன்னும் சில நாட்களுக்கு பராமரிக்க முடிந்தால் அது மிகவும் உதவியாக இருக்கும். சிறந்த நிலைமைகள் ஏற்படும்.

அதே நேரத்தில், எங்கள் வட்டி விகிதங்களும் குறையும். அது சில மாதங்களில் நடக்கும். இரண்டாவதாக வளர்ச்சி உதவி தொடங்கும். இது கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கும் உதவும்.” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.