பணத்துக்காக மனிதப் படுகொலைகள் செய்பவர் கைது..

0
178

பணத்துக்காக மனிதப் படுகொலைகள் செய்பவர் என கூறப்படும் கொந்தராத்து கொலையாளி மொரட்டுவையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 5 மன்னா கத்திகள், 3 வாள்கள் மற்றும் ஒரு கத்தி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மொரட்டுவை பிரதேசத்தில் மாணவர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேக நபர் நேற்று (24) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது அவர் கொந்தராத்து கொலையாளி என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.