மறுபிறவி பெற்ற சிறுவன்! முற்பிறவியின் நிகழ்வுகளை துல்லியமாக விவரிக்கும் அதிசயம்

0
250

இந்தியாவில் 4 வயது சிறுவன் மறுபிறவி எடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபிறவி கதைகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம். உலகில் ஆங்காங்கே இது போன்ற சம்பவங்களை அவ்வப்போது கேட்டிருப்போம்.

அது போன்ற ஒரு விடயம் இந்தியாவில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனோஜ் மிஸ்ரா என்பவர் கடந்த 2015ல் பாம்பு கடித்து இறந்தார்.மனோஜ் உயிரிழந்த 20 நாட்களுக்குப் பிறகு அவர் மகள் ரஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆர்யன் என்று பெயரிட்டனர்.

ஆர்யன் 4 வயதில் தனது தாயிடம் நீ என் தாய் அல்ல என்று அடிக்கடி கூறுவார். மேலும் தனது பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டு உள்ளார்.

Aryan

அதன்படி அம்மாவை மகள் என்றும், அண்ணனை மகன் என்றும் அழைக்க ஆரம்பித்தார். அவர் தன்னை 8 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்த மனோஜ் மிஸ்ரா என்று கூறிக்கொண்டார். தான் தாத்தாவின் மறு அவதாரம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். முக்கியமாக பாட்டி தான் தனது மனைவி என கூறுகிறார்.

மேலும், தனது தாத்தாவின் வங்கியில் வைப்பு செய்த பணம் குறித்து ஆர்யன் சரியாக கூறியது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

Aryan