உலகப்புகழ்பெற்ற சிவலிங்கம் மீது ரூபாய் நோட்டுகளை வீசிய பெண்!

0
177

இந்தியாவில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத்தில் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது.

உலகப்புகழ்பெற்ற சிவலிங்கம் மீது ரூபாய் நோட்டுகளை விசிறியடித்த பெண்! | Kedarnath Sivalingam Blew Currency

கேதார்நாத் சிவன் கோயில் ஏப்ரல் முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த வகையில் இப்போது கோயில் திறந்திருப்பதால் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

கேதார்நாத் கோயிலில் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேதார்நாத் கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது ஒரு பெண் ரூபாய் நோட்டுகளை தூவுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகப்புகழ்பெற்ற சிவலிங்கம் மீது ரூபாய் நோட்டுகளை விசிறியடித்த பெண்! | Kedarnath Sivalingam Blew Currency

சிவலிங்கத்தின் மீது ரூபாய் நோட்டுகள் தூவுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. சம்பவம் தொடர்பில் புகார் அளிக்கபப்ட்டுள்ள நிலையில் , ரூபாய் நோட்டுகளை சிவலிங்கம் மீது தூவியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.