யாழ்ப்பாணம் – மருதங்கேணி சம்பவம் குறித்து இன்று இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் தமிழ்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த மூவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகர் யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் மகளீர் அணி செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோரிடம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெற்ற பின்னர் பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.