தன்னை தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக மனித உரிமை ஆணையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவிப்பு

0
190

அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக மாநில மனித உரிமை ஆணையத்திடம் தமிழ்நாட்டு மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான நிலையில் முதன்மை அமர்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நீதிமன்ற காவலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்ற காவலுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்கக் கோருவது மற்றும் காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த மனுக்கள் மீதான நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

தன்னை தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக மனித உரிமை ஆணையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவிப்பு | Minister Senthil Balaji Arrest Case

 மனித உரிமை ஆணையம் விசாரணை

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவைச் சென்னை மேல் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா, பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்றைய தினம் (15.06.2023) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் விதிமீறல் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. 

இந்த நிலையில், செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார். 

தன்னை தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக மனித உரிமை ஆணையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவிப்பு | Minister Senthil Balaji Arrest Case

விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு

அதன்பின்னர் கண்ணதாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளமை மனித உரிமை மீறல். அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை தரையில் போட்டு தரதரவென இழுத்ததாகச் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தன்னை இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாகச் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சோர்வாகக் காணப்பட்டார். தன்னை தாக்கியதாக சில அதிகாரிகளின் பெயர்களையும் தெரிவித்தார்.

பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நேரில் விசாரித்தேன். அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் நாளைய தினம் (16.06.2023) முடிவெடுக்கும்.

மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இதனை விசாரித்துள்ளது. தான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த பின்பும் துன்புறுத்தியதாகச் செந்தில் பாலாஜி கூறியதாக மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.