இறுதிச் சடங்கில் உயிர்த்தெழுந்த பெண்ணால் உறவினர்கள் அதிர்ச்சி!

0
185

பெண்ணொருவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அவர் உயிருடன் இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஈக்குவடோரில் இடம்பெற்றுள்ளது.

பெல்லா மொன்டயா என்ற 76 வயது பெண் கடந்தவாரம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை உறவினர்கள் அவரின் உடைகளை மாற்றி இறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை அவர் சுவாசிப்பதை கண்டுபிடித்தனர்.

இறுதிசடங்கில் உயிர்த்தெழுந்த பெண்ணால் உறவினர்கள் அதிர்ச்சி | Relatives Shocked Resurrected Woman At The Funeral

உறவினர்கள் அதிர்ச்சி

தொடர்ந்து உடனடியாக உறவினர்கள் அவரை தீவிர கிசிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். நாட்டின் சுகாதார அமைச்சு இது குறித்து விசாரணை செய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளது.

குறிப்பிட்ட பெண்ணிற்கு மாரடைப்பு ஏற்பட்டது அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போதிலும் அது வெற்றியளிக்கவில்லை அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர் உறுதி செய்தார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 9 மணியளவில் அம்மாவை மருத்துவமனையில் அனுமதித்தோம் மதியமளவில் அவர் இறந்துவிட்டார் என வைத்தியர் தெரிவித்தார் என அந்த பெண்ணின் மகன் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பல மணிநேரம் உறவினர் ஒருவர் அவர் சுவாசிப்பதை காணும் வரை அவரை பிரேதப்பெட்டியில் வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பெண்மணி பிரதேப்பெட்டியொன்றில் சுவாசித்தவாறு காணப்படுவதை காண்பிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.