கொழும்பில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டம்!

0
174

கொழும்பு – இராஜகிரியவில் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். “மக்கள் ஆணைக்கு இடம் கொடு” என வலியுறுத்தியே இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

கொழும்பு – இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டமானது உள்ளூராட்சி கண்ட தேர்தலை உடன் நடத்துமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இந்நிலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் இடத்தில் நீர்த்தாரை வண்டிகள் என்பன கொண்டு வரப்பட்டுள்ளன.