அவுஸ்திரேலியா பௌத்த மதகுரு அஜான் பிராமின் கொழும்பு விமானநிலையத்தில் பல மணிநேரம் தாமதமாகியமை தொடர்பில் பெரும் சர்ச்சை மூண்டுள்ளது.
பிரதமர் தினேஸ்குணவர்த்தன கொழும்பு விமானநிலையத்தில் காணப்பட்டமை காரணமாகவே பௌத்தமதகுருவின் விமானப்பயணத்தை அதிகாரிகள் தாமதித்தனர் என முதலில் தகவல்கள் வெளியாகியிருந்தது.
அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவின் பிரசன்னம்
எனினும் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவின் பிரசன்னம் காரணமாகவே அவரது பயணம் தாமதமானதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
பௌத்த மதகுரு சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சிங்கப்பூருக்கும் பின்னர் பேர்த்திற்கும் செல்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு விமானநிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கு விமானத்தில் ஏறுவதற்காக முக்கிய பிரமுகர்களிற்கான பகுதியில் அவர் காத்திருந்த நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வாவும் முக்கிய பிரமுகர்களிற்கான பகுதியில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பௌத்த மதகுருவிற்கு உதவிக் கொண்டிருந்த விமானநிலைய அதிகாரி அமைச்சர் விமானத்திற்குள் ஏற்றுவதற்காக அவருடன் விமானத்திற்குள் சென்றுள்ளார்.
அதோடு அந்த அதிகாரி பௌத்த மதகுருவை விமானத்தில் ஏற்ற மறந்துள்ளார். அதோடு அவர் தாமதமாக வந்ததால் பௌத்த மதகுரு குறிப்பிட்ட விமானத்தில் ஏற முடியாத நிலை காணப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பௌத்த மதகுரு அந்த விமானத்தை தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டு மதகுருவின் பயணம் 12 மணித்தியலாங்கள் தாமதமாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.