சிங்கள அரசியல்வாதிகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் திட்டமிட்டனர்; சந்திரிகா

0
343

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களை பலம் பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹெஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்த டுவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இது முஸ்லீம்களிற்கு எதிரான நடவடிக்கை இந்த நடவடிக்கை 2013 இல் அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்றது அது மீண்டும் நிகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களை சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்; சந்திரிகா | Sinhalese Politicians Sunday Attacks Chandrika

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹெஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், வைத்தியர் ஷாபி விவகாரம் போன்ற பல விடயங்கள் முஸ்லீம்களை ஆபத்தானவர்களாக சித்தரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டன எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.