கணவனை விஷம் வைத்து கொன்றுவிட்டு, மிஸ் பண்ணுவதாக புத்தகம் வெளியிட்ட மனைவி!

0
319

அமெரிக்காவில் கணவரை விஷம் கொடுத்து கொலை செய்த மனைவி அவரை பிரிந்த வலியை தானே புத்தகமாக எழுதி வெளியிட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கணவரை விஷம் வைத்து கொன்றுவிட்டு அவரை மிஸ் பண்ணுவதாக புத்தகம் வெளியிட்ட மனைவி! | Wife Published Book Misses Her Husband Kill Poison

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோரி என்ற பெண்ணும் எரிக் ரிச்சின் என்ற ஆணும் திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென கடந்த வருடம் மார்ச் மாதம் தனது கணவர் எரிக் ரிச்சின் மர்மமாக உயிரிழந்ததாக கோரி தெரிவித்துள்ளார்.

கணவரை விஷம் வைத்து கொன்றுவிட்டு அவரை மிஸ் பண்ணுவதாக புத்தகம் வெளியிட்ட மனைவி! | Wife Published Book Misses Her Husband Kill Poison

பின்னர் கணவரின் மரணம் அவர் தன்னுடன் இல்லாமையாலும் தான் மன விரக்தியில் இருப்பதாக புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் மனைவி கோரி தன்னை விஷம் தந்து கொல்ல முயற்சிப்பதாக எரிக் உயிரிழப்பதற்கு முன்னர் தெரிவித்து வந்ததாக அவரது நண்பர்களும் உறவினர்களும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகமடைந்த பொலிஸார் கோரியின் தொலைபேசி மற்றும் கணினியை சோதனையிட்ட வேளை போதை மருந்து வாங்கி அதனை மதுவில் கலந்து கொடுத்து எரிக்கை கொலை செய்ததே மனைவி தான் என ஓராண்டிற்குப் பின்னர் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 33 வயதான கோரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.