யாழில் கோர விபத்து – இரு யுவதிகள் உயிரிழப்பு

0
191

யாழில் விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் மரணத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது. யாழில் ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் அல்லிப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதியதில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் விபத்தில் உயிரிழந்த இரு பெண்கள்; விசாரணையில் வெளிவந்த காரணம் | Jaffna Accident Death Two Girls

விசாரணையில் தெரியவந்தவை

கோப்பாய் பகுதியை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (வயது 26) மற்றும் மானிப்பாய் பகுதியை சேர்ந்த கீதாரட்ணம் திவ்யா (வயது 31) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன்போது காரில் பயணித்த நால்வர் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்தோடு இவ் இரு வாகனங்களும் அதி வேகமாக சென்றதே இவ்விபத்தின் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசராணிகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.