நான் புலிகளின் தலைவரின் தங்கை; சர்ச்சை கிளப்பும் சிங்களப் பெண்

0
182

யாழில் வசிக்கும் சிங்கள பெண்ணொருவர் விடுதலைப் புலிகளின் தலைவரின் தங்கை நான் என தெரிவித்துள்ள நிலையில் அது பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.

மேலும் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“விடுதலைப் புலிகளின் தலைவர் மிகவும் நல்லவர். காரணம் ஒரு தவறு நடந்தால், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார். உதாரணமாக, வித்தியாவின் படுகொலை விவகாரத்தில் இன்னமும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இருப்பினும் பிரபாகரன் இருந்திருந்தால் உடனடி தீர்வு கிடைத்திருக்கும். அப்படியான தவறுகளும் இனிவரும் காலங்களில் நடந்தும் இருக்காது.

நான் புலிகளின் தலைவரின் தங்கை: சர்ச்சை கிளப்பிய யாழில் வசிக்கும் சிங்களப் பெண் | Ltte Leader Sister Sinhalese Woman Living Jaffna

அரசாங்கத்திற்கும் பிரபாகரனுக்கும் இடையில் தான் குழப்பம் ஏற்பட்டிருந்தது. எங்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் குழப்பம் ஏற்படவில்லை.

அவர் ஒரு நல்ல மனிதர் மாத்திரமன்றி நேர்மையானவரும் கூட. ஒரு தவறுக்கு உடனடியாக தண்டனை வழங்க கூடிய ஒருவர்.

எனினும், எங்களுடைய அரசாங்கம் வழக்கு விசாரணைகளில் சம்பந்தப்பட்டவர்கள் இறக்கும் வரையும், இறந்த பின்னும் அந்த வழக்குகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது” என குறித்த பெண்மணி தெரிவித்துள்ளர்,