முகத்தில் செல்போன் வெடித்து 3ம் வகுப்பு சிறுமி மரணம்!

0
200

கேரளாவில் முகத்தில் செல்போன் வெடித்ததால் 3-ம் வகுப்பு சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் வெடித்து 3-ம் வகுப்பு சிறுமி மரணம்

கேரளா, திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்ற 3ம் வகுப்பு படிக்கும் சிறுமி நேற்று, தனது செல்போனில் கார்ட்டூன் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென செல்போன் வெடித்து சிதறயிது.

முகத்தில் செல்போன் வெடித்து சிதறியதால் 8 வயது ஆதித்யஸ்ரீ படுகாயம் அடைந்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் படுகாயம் அடைந்த ஆதித்யஸ்ரீயை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவ சிகிச்சை கொடுத்தபோதிலும், சிகிச்சை பலனில்லாமல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பழையனூர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.